
எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்தின் ஒரு படியாக இம்முறை தேசிய மட்டப்போட்டிக்கு 4 இடங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கடந்த வருடம் 3 இடங்கள் கிடைத்தது. இவ்வருடம் இது ஒரு படி அதிகரித்துள்ளது.இம்மாணவர்களையும் இம்மாணவர்களைப் பயிற்றுவித்த விளையாட்டாசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 07.07.2011 அன்று அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற்றது.


